செவ்வாய், நவம்பர் 22, 2016

குறள் எண்: 0478 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0478}

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

விழியப்பன் விளக்கம்: வருமானத்தின் அளவு குறைந்தாலும்; செலவினங்கள் எல்லையைக் கடந்து போகாத வரையில், பெரிய தீமையேதும் நேர்வதில்லை!
(அது போல்...)
நற்சிந்தனையின் வீரியம் சிதைந்தாலும்; தீவினைகள் மனதை ஆக்கிரமித்து பரவாத வரையில், அதீத அழிவேதும் நிகழ்வதில்லை!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக