புதன், செப்டம்பர் 21, 2016

குறள் எண்: 0416 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0416}

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

விழியப்பன் விளக்கம்: இயன்ற அளவில் நல்லவற்றைக் கேட்டு, பகுத்தறிவை வளர்க்க வேண்டும்; அப்படி நாம் வளர்க்கும் அளவிற்கு, நிலைத்த பெருமை கிடைக்கும்.
(அது போல்...)
முடிந்த வரை அறமுள்ளோரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைத் தொடர வேண்டும்; அப்படி நாம் தொடரும் அளவிற்கு, சிறந்த பிறவிப்பயன் விளையும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக