திங்கள், ஆகஸ்ட் 29, 2016

குறள் எண்: 0393 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0393}

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

விழியப்பன் விளக்கம்: கற்றோரே, பார்வையுடைய விழிகளை உடையவராவர்! கல்வி கற்காதவர்கள், முகத்தில் - பார்வையற்ற இரண்டு வெற்றிடங்களை உடையவர் ஆவர். 
(அது போல்...)
புரிதலுடையோரே, கேட்கின்ற செவிகளை உடையவராவர்! புரிதல் அற்றவர்கள், தலையில் - கேட்காத இரண்டு ஓட்டைகளை உடையவர் ஆவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக