புதன், ஆகஸ்ட் 31, 2016

குறள் எண்: 0395 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0395}

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

விழியப்பன் விளக்கம்: செல்வந்தர் முன்பு, வறியவர் நிற்பது போல், கற்றவரை மதித்துக் கற்போரே, முதன்மையடைவர்! அப்படிக் கற்காதோர், பின்னடைவார்!
(அது போல்...)
இறைவன் முன்பு, பக்தர்கள் நிற்பது போல், பெற்றோரை வணங்கி வளர்வோரே, உயர்ந்தவராவார்! அப்படி வலராதோர், சாதாரணராவர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக