ஞாயிறு, ஜூலை 31, 2016

குறள் எண்: 0364 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0364}

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

விழியப்பன் விளக்கம்: மனத்தூய்மை என்பது, ஆசையற்ற தன்மையாகும்; அந்த தன்மை, வாய்மையை உணரும் ஆசையால் விளையும்.
(அது போல்...)
மனிதம் என்பது, மிருக-குணமற்ற நிலைப்பாடாகும்; அந்த நிலைப்பாடு, உயிர்களை நேசிக்கும் குணத்ததால் சாத்தியமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக