செவ்வாய், ஜூலை 26, 2016

குறள் எண்: 0359 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0359}

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

விழியப்பன் விளக்கம்: பொய்யின் தொடர்புகளை உணர்ந்து, அத்தொடர்பை அறுத்து வாழ்ந்திடின்; அதையும் கடந்து துன்பத்தை அளிக்கும் தொடர்பை, வேறொரு தொடர்பு உருவாக்காது.
(அது போல்...)
தீயறத்தின் காரணிகளைக் கண்டறிந்து, அக்காரணியை அகற்றப் பழகிடின்; அதையும் தாண்டி தீயறத்தை உயிர்ப்பிக்கும் காரணியை, மற்றோர் காரணித் தூண்டாது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக