ஞாயிறு, ஜூலை 24, 2016

குறள் எண்: 0357 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0357}

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

விழியப்பன் விளக்கம்: உள்ளத்தில் பகுத்தறிந்து, மெய்ப் பொருளை உறுதியாய் உணர்ந்தால்; நமக்கு இன்னுமோர் பிறவித்துன்பம் உண்டென்ற, நம்பிக்கைத் தேவையில்லை.
(அது போல்...)
மனிதத்தில் ஒருங்கிணைந்து, மனித தத்துவத்தை முழுவதுமாய் அறிந்தால்; நமக்கு மற்றுமோர் பரிணாமவளர்ச்சி தேவையென்ற, எண்ணம் அவசியமில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக