வியாழன், ஜூலை 21, 2016

குறள் எண்: 0354 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்; குறள் எண்: 0354}

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து, மெய்யுணரும் திறம் இல்லாதோர்க்கு; ஐவகை உணர்வுகளை அடக்கியாளும் திறனிருந்தும் பயனில்லை.
(அது போல்...)
குடும்பத்தினரை அரவணைத்து, அன்புக்கு அடிபணியும் வீரமற்றோர்க்கு; பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் வலிமையிருந்தும் வாழ்வில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக