வெள்ளி, ஜூன் 24, 2016

குறள் எண்: 0327 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 033 - கொல்லாமைகுறள் எண்: 0327}

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை

விழியப்பன் விளக்கம்: நம்முயிரை இழக்கும் நிலையிலும், அதைக் காப்பதற்காக; வேறொரு உன்னத-உயிரைப் பறிக்கும் தீவினையை, நாம் செய்யக்கூடாது.
(அது போல்...)
நம்-பதவி பறிபோகும் சூழலிலும், அதைத் தக்கவைக்க; பிறருக்கு உரிமையான-பதவியைப் பறிக்கும் இழிசெயலை, நாம் செய்தலாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக