வியாழன், ஜூன் 02, 2016

குறள் எண்: 0305 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 031 - வெகுளாமைகுறள் எண்: 0305}

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

விழியப்பன் விளக்கம்: நம்மையே நாம் காத்திட விரும்பினால், சினத்தைக் காக்க வேண்டும்; அப்படி காக்காவிட்டால், அந்த சினமே நம்மை அழித்துவிடும்.
(அது போல்...)
நம்மையே நாம் மதித்திட எண்ணினால், அந்தரங்கத்தை ஒழிக்க வேண்டும்; அப்படி ஒழிக்கவிட்டால், அந்த அந்தரங்கமே நம்-மதிப்பை சிதைக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக