செவ்வாய், மே 10, 2016

குறள் எண்: 0282 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  029 - கள்ளாமைகுறள் எண்: 0282}

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

விழியப்பன் விளக்கம்: களவு எண்ணத்துடன், பிறர் பொருளை அபகரிக்கலாம் என மனதால் நினைப்பதும்; தீயொழுக்கமே ஆகும்.
(அது போல்...)
பகை உணர்வுடன், பிறர் அந்தரங்கத்தை புறங்கூறலாம் என வாய்மொழியால் திட்டமிடுவதும்; அறமற்றதே ஆகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக