புதன், மார்ச் 30, 2016

குறள் எண்: 0241 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0241}

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

விழியப்பன் விளக்கம்: தற்காலிக மகிழ்ச்சியான, பொருளெனும் செல்வம் - இழிவான மக்களிடமும் உள்ளதால்; நிலைத்த மகிழ்ச்சியான அருளே, செல்வத்துள் முதன்மையான செல்வமாகும்.
(அது போல்...)
போலியான வலிமையான, கோபமெனும் குணம் - பலவீனமான மக்களிடம் இருப்பதால்; அசலான வலிமையான பொறுமையே, குணத்தில் சிறந்த குணமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக