புதன், மார்ச் 23, 2016

குறள் எண்: 0234 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்:  024 - புகழ்குறள் எண்: 0234}

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

விழியப்பன் விளக்கம்: புவியுலக எல்லையில், என்றுமழியா புகழ்தரும் செயல்களைச் செய்தால்; "தேவர் உலகம்" தேவர்களைப் போற்றுவதற்கு மாறாய், அவர்களைப் போற்றும்.
(அது போல்...)
சமதர்ம அடிப்படையில், நிலையான செல்வமான கல்வியைக் கற்பித்தால்; "கற்பவர் உலகம்" செல்வத்தை வணங்குவதைத் தவிர்த்து, குருவை வணங்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக