சனி, ஜனவரி 02, 2016

குறள் எண்: 0153 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 016 - பொறையுடைமைகுறள் எண்: 0153}

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

விழியப்பன் விளக்கம்: விருந்தினரை உபசரிக்கமுடியாதது, வறுமையில் வறுமையாம்; அதுபோல், அறிவிலிகளைப் பொறுத்தருள்வது - வலிமையில் வலிமையாம்.
(அது போல்...)
மனிதத்தைப் பின்பற்றாதோர், விலங்குகளில் கொடுவிலங்காம்; அதுபோல், மனிதமற்றவரையும் நேசிப்போர் - மனிதரில் மாமனிதராம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக