சனி, டிசம்பர் 26, 2015

குறள் எண்: 0146 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 015 - பிறனில் விழையாமைகுறள் எண்: 0146}

பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 
இகவாவாம் இல்லிறப்பான் கண்

விழியப்பன் விளக்கம்: பிறர் இல்லத்தாளிடம், நெறிதவறி நடந்து கொள்பனிடம்; பகை/பாவம்/பயம்/பழி - எனும் நான்கும் நீங்காமல் இருக்கும்.
(அது போல்...)
பிறர் உரிமைகளை, ஊழல் செய்து பறிப்பவர்களிடம்; பேராசை/பொறாமை/வன்மம்/சூழ்ச்சி - எனும் நான்கும் எப்போதும் இருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக