ஞாயிறு, நவம்பர் 29, 2015

குறள் எண்: 0119 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 012 - நடுவு நிலைமைகுறள் எண்: 0119}

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

விழியப்பன் விளக்கம்: ஒருபுறம் சாராமல், உள்ளத்தில் அறத்தை மீறாமல் இருக்கமுடிந்தால் - சொல்லிலும் அறமீறல் இருக்காது; அதுவே, நடுநிலைமையாம்.
(அது போல்...)
ஒருபாலினம் சாராமல், மகன்/மகள் பிரிவினை இல்லாமல் இருக்கப்பெற்றால் - வளர்ப்பிலும் பிரிவினை இருக்காது; அவர்களே சிறந்த-பெற்றோராவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக