செவ்வாய், நவம்பர் 10, 2015

குறள் எண்: 0100 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 010 - இனியவை கூறல்குறள் எண்: 0100}

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

விழியப்பன் விளக்கம்: நன்மை விளைவிக்கும் சொற்கள் பலவிருக்க, தீயவற்றைப் பேசுவது; கனிந்தது இருக்க, காயைக் கொய்வது போன்றதாகும்.
(அது போல்...)
வாழ்வை உயர்வுக்கும் அறவழிகள் பலவிருக்க, தீயவழியில் பயணிப்பது; மனைவி உடனிருக்க, பிற-பெண்களைப் பார்ப்பது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக