சனி, அக்டோபர் 24, 2015

குறள் எண்: 0083 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0083}

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

விழியப்பன் விளக்கம்: நாள்தோறும் - விருந்தினர்களை, புன்னகையுடன் பேணுவோரின் வாழ்க்கை; ஒருநாளும் துன்பப்பட்டு கெட்டுப்போவதில்லை.
(அது போல்...)
எந்நிலையிலும் - எல்லாவற்றிலும், சமசரமில்லாத அறநெறிப் பழகுவோரை; தோல்வியெதுவும் நிலைகுலைக்கச் செய்வதில்லை.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக