திங்கள், ஆகஸ்ட் 03, 2015

குறள் எண்: 0001 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0001}

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு                          

விழியப்பன் விளக்கம்: மொழியைப் புரிந்துகொள்ள எழுத்துகளை அறிதலும்; உலகைப் புரிந்துகொள்ள கடவுளை அறிதலும் - முதன்மையாம்.
(அது போல்...)
உணர்வைப் புரிந்துகொள்ள, மனிதத்தை அறிதலும்; உறவைப் புரிந்துகொள்ள பெற்றோரை அறிதலும் - முதன்மையாம்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக