புதன், ஆகஸ்ட் 19, 2015

குறள் எண்: 0017 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0017}
                           

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 
தான்நல்கா தாகி விடின்

விழியப்பன் விளக்கம்: மேகமானது பூரிப்புடன், மழையைப் பொழியாது போனால்; நீண்ட ஆழமான கடலும், தன் தன்மையை இழக்கும்.

(அது போல்...)

குருவானவர் மனப்பூர்வமாய், ஆசிர்வாதத்தை வழங்கத் தவறினால்; நிகரில்லா வல்லவர் ஆயினும், தன் வல்லமையை இழப்பர்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக