திங்கள், ஆகஸ்ட் 17, 2015

குறள் எண்: 0015 (விழியப்பன் விளக்கவுரை)

 {பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0015}
                             

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

விழியப்பன் விளக்கம்: பொய்த்து துன்பப்படுத்துவது; மேலும், அப்படி துன்பப்பட்டோர்க்கு துணையாய் நின்று மீட்டுயர்த்துவது - இப்படி யாவுமாய் மழை இருக்கிறது.

(அது போல்...)

ஆண்களை உயிர்ப்பிப்பது; தேவையெனில், அப்படி உயிர்ப்பித்தவர்களை திண்ணமாய் இருந்து அழிப்பது - இப்படி எல்லாமுமாய் பெண் இருக்கிறாள்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக