திங்கள், ஜூலை 27, 2015

ஒரு மரணம்...


     
        மரணித்து கிடக்கிறான்! மனைவி அழுது புலம்புகிறாள். உறவும்/சுற்றமும் எப்படி? என்ன?? - வித விதமாய் கேட்கிறார்கள். அவளால் உறுதியாய் எதுவும் சொல்லமுடியவில்லை! மீண்டும், மீண்டும் அழுகிறாள்; மூர்ச்சையாகிறாள். உறவும்/சுற்றமும் தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். தெரியாதவர்களின் தொடர்பை பெற அப்பெண்ணிடம் அலைபேசி கேட்கிறார்கள்; அவள் கையை காண்பிக்கிறாள். 4 வயது மகள் அலைபேசியில் எதையோ பார்த்து கொண்டிருக்கிறாள். ஒருவர் அலைபேசியை வாங்கி பார்க்கிறார்; வெளியே சென்று ஒரு எண்ணை அழைத்து பேசுகிறார். சிறிது நேரத்தில் காவலர்கள் வருகிறார்கள்; கணவனை கொலை செய்ததற்காக அப்பெண் கைதாகிறாள்.உடனிருந்த ஆணைப்பற்றிய விபரம் தெரியவில்லை; இருவரும் சேர்ந்து அந்த கணவனை கீழே தள்ளி ஏதோ செய்கிறார்கள். 4 வயது மகள் ஏதோ ஒரு பொத்தனை அழுத்த "10 வினாடியில் ஒரு காணொளி" பதிவாகி இருந்தது. காவலரின் விசாரிப்பில்; ஒப்புக்கொண்டாள்...

கள்ளக்காதலுக்காய்... கணவனை கொன்றுவிட்டேன் என்று!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக