செவ்வாய், ஜூலை 28, 2015

ஒரு மரணம் (திருத்தப்பட்டது)...


{நல-விரும்பிகள் சிலரது விமர்சனத்தால் "நன்றிகளுடன்" திருத்தப்பட்ட வடிவம்...!}
   
        கூடியிருந்தவர்கள் எப்படி? என்ன?? என்று விசாரிக்க; உறுதியாய் எதுவும் சொல்லமுடியாமல் மூர்ச்சையாகிறாள் - மரணித்து கிடந்தனின் அருகில் தொடர்ந்து அழுதுகொண்டிருந்த மனைவி. கூடியிருந்தோர் தெரிந்தவர்களுக்கு தகவல் கொடுக்க அப்பெண்ணின் அலைபேசி கேட்டனர். அவள் தன் 4-வயது மகளை காட்டினாள். எதையோ ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த அவளிடமிருந்து ஒருவர் அலைபேசியை வாங்கி அதிர்ச்சியுடன் பார்த்தார். வெளியே சென்று ஒரு எண்ணை அழைத்து பேசினார். ஒரு மணி நேரத்தில், காவலர்கள் வந்து கணவனை கொலை செய்ததற்காக அப்பெண்ணை கைது செய்தனர். அப்பெண் தன்-கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவள் கணவனை கீழே தள்ளி ஏதோ செய்தது; 4-வயது மகள் எதேச்சையாய் பதிந்த "10 வினாடியில் ஒரு காணொளி" - யில் தெளிவாகியது. காவலர்களின் "முறையான" விசாரிப்பில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டாள்.

*******

பின்குறிப்பு: "ஒரு மரணம்" கொலையென்று நிரூபிக்கப்பட்டு "சட்டம் நிலைநாட்டப்பட்டதை" எண்ணி மகிழ்வதும்; தன்னை(யும்) அறியாமல் பதிந்த காணொளியால் "யாருமற்று தனித்திருக்கும்" 4-வயது குழந்தையைப் பற்றி கவலைப்படுவதும் - உங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக