ஞாயிறு, ஜூன் 15, 2014

டே! அப்பா!!



          சென்ற வியாயக்கிழமை மாலை வழக்கம்போல் என்னவளை அலைபேசியில் அழைத்து பேசிவிட்டு; பாப்பா எங்கே? என்றேன். எப்போதும் "தோ... கொடுக்கறேன் இருங்க!" என்பவள், உடனே கொடுத்து விட்டால் போலும்! என்னவளிடம் பேசுவதாய் தொடர்ந்து பேசினேன்; என் கேள்வியை முடிக்கும் வரை அமைதியாய் இருந்துவிட்டு திடீரென்று... "டே! அப்பா!!" என்ற குரல் வந்தது. என்மகளுக்கு அவளிடம் பேசாது யாரிடமோ பேசுவது போல் பேசியது கண்டு சினம் வந்துவிட்டது; அவள் எதையும் சொல்லாமல் அனைத்து கோபத்தையும் "டே! அப்பா!!" என்ற இரண்டு சொற்களில் சொல்லியது புரிந்தது. என்மகள் முன்பு கூட ஓரிருமுறை அப்படி சொல்லி இருக்கிறாள்.  ஆனால், அன்று அவளின் உணர்வை வெளிப்படுத்த அப்படி சொல்லியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது; வெகுவாய் இரசித்தேன். கண்டிப்பாய் இந்த "டே!" என்பதை என்மருதந்தையிடம் இருந்து அவள் கற்றிருக்கவேண்டும்; அவர் தான் அவளை அப்படி அழைப்பார். எதெப்படியோ, அவள் அப்படி அழைத்தது எனக்கு பிடித்திருந்தது. 

      இம்மாதிரி நமக்கு மிகவும் பிடித்த சிலரால் இப்படி அழைக்கப்படுவதும் அல்லது நமக்கு மிகவும் பிடித்த சிலரை இப்படி அழைப்பதும் ஒரு பரம-சுகம்! இதை அனுபவிப்பர்களுக்கு தான் புரியும்; எனக்கு நினைவுகள் மலர்ந்தன! "டே! புருஷா!!" என்று எழுத்துக்களால் எழுதப்பட்டும்; வார்த்தைகளால் கேட்கப்பட்டதுமான நாட்கள் நினைவுக்கு வந்தன. அப்போதெல்லாம் என்னவளுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது "Hi di HP!" என்று தான் ஆரம்பிப்பேன்; ஆம்! HP என்றால் "Honey Pondaatti" என்று நான் வரையறுத்தது! திடீரென்று ஒருநாள் அவளிடமிருந்து "Hi da HP!" என்று வந்தது; என்னவென்றால்?! "Honey Purushaa"; என்னவள் தந்த பதில். ம்ம்ம்... அதுவெல்லாம் "இப்போது ஒரு கனாக்காலம்"!. இம்மாதிரி அடைமொழிகளுடன் நான் அழைக்கும்/அழைக்கைப்படும் பல உறவுகள் உண்டு. என்னவளை இன்னமும் "பாப்பா!" என்றுதான் அழைப்பேன்; ஆம், (உடன்பிறந்த)தங்கை இல்லாத குறை இன்றும் எனக்குண்டு - அதன் வெளிப்பாடுதான் "பாப்பா"!. ஆனால்...

எந்த தயக்குமும் இல்லாமால் "டே! அப்பா!!" எனக்கு மிகவும் உயர்வானது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக