ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

என்மகளுக்காக...



    ஒரு-மாதத்திற்கு முன் என்னுடைய நட்பு ஒருவர் "கொரிய"நாட்டிற்கு சென்று வந்து "சாக்லெட்டுகள்" கொடுத்தார்! அதில் ஒன்றை சாப்பிட்டதும், சுவை மிகவும்-வித்தியாசமாய் இருந்ததால்;  என்னவென்று பார்த்தேன்! அது "மாதுளம்-பழத்தில்" செய்திருந்தது தெரிந்தது; மிகவும் நொந்துகொண்டேன். ஆம்! என்மகளுக்கு "மாதுளம்-பழம்" என்றால் உயிர்! "பாம்மி; பாம்மி..." என்று என்னவள் சொல்லிக்கொடுத்த-வண்ணம் அழகாய் சொல்வாள். சரியென்று, மீதியிருந்த 2-ஐயும் எடுத்து வைத்திருக்கிறேன். நாளை, இந்தியா சென்றதும் அவளுக்கு கொடுக்கவேண்டும். நான், இப்படித்தான்; சிலர், என்னை "கிறுக்குத்தனமாய்" இருப்பதை விமர்சிப்பர்! எனக்கு இதுபற்றி, எந்த கவலையும் இல்லை. எனக்கு, இவ்விதம் செய்வது பிடித்திருக்கிறது; மாதுளம்-பழத்தில் செய்த சாக்லெட் இங்கு கிடைக்குமா?! என்று தெரியவில்லை! இந்தவார தலையங்கத்தில் சொல்லி இருப்பது போல் "வீடு மாற்றும் அலைச்சலில் - அதை தேடிப்பார்க்க இயலவில்லை.

       முதல் படத்தில் இருப்பது அந்த சாக்லெட் தான்! இடையில் இருப்பது, அரேபிய-நண்பன் கொடுத்த இன்னுமொரு சுவையான சாக்லேட் கவர்!! அதையும், தேடி வாங்க இயலவில்லை. இரண்டாம் படத்தில் இருப்பது, உணவகத்தில் கொடுத்த சிறு-பிளாஸ்டிக் கப்புகள்! என்மகள் விளையாட உதவும் என்று கழுவி வைத்திருக்கிறேன். போர்ச்சுக்கல் நாட்டிலிருந்தபோது "பிஸ்ஸா"டெலிவரியில் இருக்கும் சிறு-பிளாஸ்டிக் முக்காலியை, பின்பு என்மகள் பொம்மைகள் வைத்து விளையாடுவாள் என்று சேர்த்து வைத்திருக்கிறேன். என்னவள் கூட "அவ, இதையெல்லாம் வச்சு விளையாடறாளோ? என்னவோ?; அதை ஏன் இப்படி சேக்கறீங்க?!" என்பாள். அதுபோன்றே, இருவரும் பின்பு இந்தியாவிலேயே இருப்பது என்று முடிவானதால், என்மகள் அவைகளை வைத்து விளையாடவில்லை! ஆனால், கிளம்பும் வரை அவைகளை வைத்திருந்தேன். இப்போதும், அப்படியே!! அவளுக்கு உதவும் என்று நம்புகிறேன்; இல்லாவிட்டாலும், பரவாய் இல்லை! இது, ஒரு திருப்தியான விஷயம்...

எத்தனை வயதானாலும், என்மகளுக்காய் இப்படி செய்வது நிற்காது என்றே நம்புகிறேன்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக