ஞாயிறு, மார்ச் 23, 2014

என்னைப் பாதுகாத்த என்மகள்...



   சென்ற முறை இந்தியா சென்றிருந்தபோது என்மகள் செய்த விசயம் ஒன்று என்னை ஆச்சர்யபடுத்தியது! இதுபோல், பலரின் குழந்தைகளும் செய்திருக்கக்கூடும். ஆனால், என்மகள் அப்படி செய்ததை பார்த்ததும்; என்னுள் தோன்றியது "குஞ்சுகளும்; இங்கே கோழிகளை காக்கும்!" என்பதே! ஆம்; நம் குழந்தைகளும் நம்மை "குஞ்சுகளை; காக்கும் கோழிகள்"போல பாத்துகாக்கும், இது போன்ற செயல்கள் நடக்கும். நிகழ்வு இதுதான்: என்னுடைய உறவு ஒருவர், அவரின் வருத்தமான நிகழ்வு ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் ஊர்-பக்கம் இம்மாதிரி நிகழ்வுகளை கூறும்போது நம்மை கேள்வி கேட்பது போல் பலரும் கேட்பர்! அவர் அப்படித்தான் ஒரு கேள்வியாய் என்னிடம் "...என்ன தான் நடந்திருக்கட்டுமேப்பா! நீ என்னை ஒரு வார்த்தை கேட்கக்கூடாதா?!..." என்றார்! அவரின் பேச்சு ஆற்றாமையாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது! எங்கோ விளையாடிக்கொண்டிருந்த என்மகள் அவர் அப்படி என்னை-கேட்டதை கேட்டுவிட்டு ஓடோடி வந்தாள்.

         ஓடி வந்தவள், எங்கள் இருவருக்கும் இடையில் நின்று என்னை "கோழி அடைகாப்பது போல்" மறைத்துக்கொண்டு நின்றுகொண்டாள்! அவர் என்னை திட்டுவதாய் நினைத்துவிட்டாள் அவள்; அவளின் புரிதல் அவ்வாறு! முகத்தை கோபமாய் வைத்துக்கொண்டு "எங்கப்பா பாவம்! அவர என் திட்டறீங்க?!..." என்று கிட்டத்திட்ட அவரிடம் சண்டை போடுகிறாள். எனக்கு பெரிய-சிரிப்பு வருகிறது; அவரோ அப்படி ஆழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்! சிரித்தால், நன்றாக இருக்காது என்று நினைத்து என்மகளிடம் "இல்லடி! அப்பாவை திட்டடலடி!!..." என்று என்ன-சொல்லியும் என்மகள் கேட்கவில்லை! எனக்கு சிரிப்பு வரும் அதே வேலையில், அவளின் செய்கை எனக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்தது! அப்போதுதான், மேற்கூறியவண்ணம் என்மகள் போல் கோழிகளை பாதுக்காக்கும் பல "குஞ்சுக்"கோழிகளும் இங்கே உண்டு! என்று தோன்றியது. அதை "குஞ்சுக்" கோழிகள் என்று ஒரு புதுக்கவிதையாயும்  எழுதியிருக்கிறேன். இதுபோல் நம்...

குழந்தைகள்; நம்மை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருப்பர்!!!

பின்குறிப்பு: இன்றைய மன-நிலையில்/வயதில் என்மகள் இப்படி தவறாய் புரிந்துகொண்டு; மற்றவரிடம் வாதிடுவதை(வேண்டுமானால்) பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கே "பல குழந்தைகள் வளர்ந்து; பெரியவர்கள் ஆன பின்னும்" இப்படிப்பட்ட தவறான புரிதலோடு பிறரிடம் சண்டைகள் போடுவதுண்டு. எனவே என்மகள் வளர்ந்தபின், இப்படி நடந்துகொள்ளாமால் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற உண்மை(யும்) புரிந்தது!!!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக