ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

"ஆட்கொல்லி"யை வென்ற ஆட்கொள்ளி!!!



(திரு. பத்ரசாமி சின்னசாமி அவர்களுக்கு சமர்ப்பனம்!)
**********

அண்ணாச்சி!

சில-பூச்சிகள் "ஆட்கொல்லி" விலங்கொன்றை கொன்றதற்காய்;
பல-விதங்கள் ஆய்-உன்மீது களங்கமொன்றை சொல்கின்றன!

ஆனால், நானோ?!....உன்னையே "ஆட்கொள்ளி" என்பேன்!

ஆம்!

என்போன்ற பலரின் உள்ளங்களை;
அன்போடு "கொள்ளையடித்து; ஆண்டு"
கொண்டிருப்பதால்; கண்டிப்பாய் நீயொரு
"ஆட்கொள்ளி"

விழுப்புண்ணை கூட "வீரத்தோடு
முழங்காமல்"; அச்சிறார்கள்  "நாவினாற்-சுட்டதோடு"
அழகியலாய் ஒப்பிட்ட; நீயொரு
"ஆட்கொள்ளி"

வனத்தையே காக்கும் உன்போன்றோர்
இனத்தையே; பழிப்போர் அவர்மீது(ம்)!
சினத்தையே  கொள்ளாத; நீயொரு
"ஆட்கொள்ளி"

என்போன்றோர் உன்னை உள்ளத்தாலும்;
உன்போன்றோர் அவர்தம் உழைப்பாலும்;
பன்"ஆட்கொள்ளிகள்" சூழ்ந்திருக்கும்; நீயொரு-(மா)
"ஆட்கொள்ளி"

இந்த(பே/போ)ர் "ஆட்கொள்ளி(கள்)"
சந்தர்ப்பம் மீண்டு(ம்)-வந்தால்;
இன்னும்-சில "ஆட்கொல்லிகளை"
கொன்றுபோட தயங்கார்(கள்)!
என்றே-எச்சரிக்க தயங்கார்;
என்போன்ற "ஆட்கொள்ளிகள்"!

வாழ்க "ஆட்கொள்ளிகள்"; வீழ்க "ஆட்கொல்லிகள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக