ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

தமிழ் வளர...


பாவேந்தருக்கு சமர்ப்பனம்!
(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)

*****


தமிழ்இனி மெல்லச் சாகும்
       என்றனர் தமிழ்ச்சான் றோராம்!
உமிழ்வதாய் உணரப் பெரினும்
       இல்லையென் றிடதுணி வில்லை!
அமிழ்தமாய் இருந்தஎம் தமிழும்
       தொய்ந்து தான்உள் ளதின்று!
குமிழ்தேக் குபோன்றே எந்தமிழ்
       செழித்திடல் யாங்கனம் சொல்வீர்!!!

திரைப்படப் பெயர்மாற் றுவதால்
        செழிக்குமோ? இல்லை சிறார்தம்
துறைப்பா டப்புத் தகத்தை
        தமிழில் படிப்பதால் மாறுமோ??
அரசுசார் அலுவலர் கையொப்பம்
        இடுவதால் மாறுமோ? இல்லைநம்
அரசியலார் "வாய்ச்சொல் வீரராய்"
        முழங்குவ தால்தான் மாறுமோ???
  
முகங்கள் முப்பது கோடியாம்;
        அகங்கள் ஆயினும் ஒன்றென!
யுகங்கள் பலவாய் சொன்னதை
        மதங்கள் பலவும் ஏற்றன!
தேகங்கள் அவைதம் நிறத்தில்
        மட்டுமே பேதம்! அல்லவே?
நகங்கள் அடியினில் ஓடிடும்
        இரத்த அணுக்கள் தம்மில்!

ஏனையும் தமிழில் என்பதும்!
        வேற்றுமை தகர்த்து ஒற்றுமை
"ஆனை"யும் காத்தநம் நாட்டை;
        "ஆற்றினை இழந்த கடல்அது
வானையும் மண்ணையும் மழைநீர்
        அற்றதாய் மாற்றி; உலகப்
பானையை வெப்பம யமாய்செய்
        ததுபோல்" மயானமாய் ஆக்கிடும்!!

"தமிழ்வள ர"தமிழைப் பயிலல்
       வேண்டும்! மாறாய் பலதையும்
தமிழில் படித்தல் முறையோ?
        சங்கத் தமிழ்நூல் களையே
தமிழென வெறுமே வாதிடல்
        தொடர்ந்து; தங்கிடத் தவிக்கும்
தமிழனைத் தாங்கிடச் செய்வோம்!!
        மொழியினும் முதன்மை மனிதமாம்!!!

மொழி-ஆய் செய்யும் அறிஞரை
        ஊக்கம் கொடுத்தே; அவரை
பழிப்பதை குறைப்போம்! அவர்தம்
        சுயத்தைக் காப்போம்! அவர்பின்
மொழியை மட்டுமா? மனிதமும்
        சேர்த்தே காப்பர்! ஆங்குமோர்
செழிப்புறும் நாட்டையும் காப்பர்!
        உணர்வரோ இதையும் படிப்பர்??

இவைகளை செய்திடின் இனிவரும்
        தலைமுறை யரேனும்; தமிழ்தனை
அவையினில் வெறுப்புடன் அன்றிலாம்
       விருப்புடன் கற்பரே! கேட்பரோ;
அவைதனில் வீற்றமர்ந் திருப்போர்??
       கேட்டிடின்! வருவரே நம்தமிழ்ச்
சுவையினில் திளைக்கவே பற்பலர்!
       கோட்டையில் இருப்போர் கேட்பரோ???

மொழியது உணர்வாய்; ஒட்டிவாழ்
       உறவாய் இருத்தல் அவசியம்!
பழியாய் பிறர்மேல் வஞ்சகம்
       உறைந்தே இருத்தல் அசிங்கம்!!
ஊழியாய் எவர்மொழி அதுவையும்
       எண்ணிடல் இழுக்காம் என்பதாம்;
மொழிமேல் ஈர்ப்புகொள் "தமிழ்மொழி
       கதைக்கும் இந்தியன்" விருப்பமாம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக