ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

இதுதான் - கமலை, புரிந்துகொள்வது!!!



     என்னுடைய வலைப்பதிவை தொடர்ந்து படிப்போருக்கு நான் கமல்-ஹாசன் அவர்களின் "அபிமானி" என்பது "வெளிப்படையாய் தெரிந்த-இரகசியம்(Open Secret)". நான் என்னை, கமலை அருகிருந்து கவனிக்க ஆரம்பித்தபின் அவரின் இரசிகன் என்று எப்போதும் கூறியதில்லை! என்னைப் பொருத்தவரை "இரசிகன்" என்பவன் அவன் விரும்புவது இருந்தால்(மட்டுமே) இரசிப்பவன்; ஆனால், அபிமானி என்பவன் ஒருவர் தருவதை (அப்படியே)விரும்புவன். அதனால் தான், "அன்பே-சிவம்" படத்தை பலதாரரும் பல-ஆண்டுகளுக்கு பின் புகழ ஆரம்பிப்பதற்கு முன், என் போன்றோர் அந்தப்படம் வந்தவுடனே(யே) இரசித்தோம். "மகாநதி" படத்தை 11 முறை திரைப்பட-அரங்கில் காண வைத்தது; அந்த படம் "வசூல்-ரீதியாய்" வெற்றிபெறாதது என் போன்றோருக்கு ஓர் பெரியகுறை; அதுபோல், பலபடங்களை கூறலாம்! நான், இங்கே கூறமுனைவது; விஸ்வரூபம் திரைப்படம் பற்றி நான் சமீபத்தில் "இணைய-தளம்" ஒன்றில் கண்ட காணொளி குறித்து! இதுதான், கமலை புரிந்துகொள்ளும் விதம்!!

       நான் பெரும்பாலும், கமலை "உணர்வு-ரீதியாய்" பார்ப்பவன்; அதாவது பல உறவுகள், பல நிகழ்வுகள் குறித்து அவரின் உணர்வும், உணர்ச்சியும் எப்படி இருக்கும் என்று பார்ப்பவன். அது சார்ந்தே, என்னுடைய பதிவிலும், அவர் பற்றி கூறியிருப்பதை நீங்கள் காணமுடியும். ஆனால், இந்த கானொளியில்  அந்த நபர் அந்த திரைப்படத்தின் திரைக்கதையை, ஒவ்வொரு சிறுவிசயத்திலும் இருக்கின்ற நுணுக்கங்களை, எப்படி ஒவ்வொரு காட்சியும் ஓர் பெரிய உண்மையை/கருத்தை "வசனமே இல்லாது" சொல்லி இருக்கிறது என்பதையும் விளக்கி இருக்கிறார். அதுமட்டுமல்ல, திரைப்பட தலைப்பில் வரும் அதே "எழுத்துருவை(Font) அவரும் உபயோகித்திருக்கிறார் - இதுதான், கமலை விரும்புவோரின் திறன்!  கண்டிப்பாக, அவரை பாராட்டவும்; அவர் "அறிவு-ரீதியாயும்" பார்த்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த நபர் பெயரைக்கூட குறிப்பிடாது "secretagent786" என்று இரகசியமாயும் வைத்திருக்கிறார். அவர் "இரகசிய-இரசிகனாய்"-ஆகவே இருக்கட்டும்...

    (சிலமணித்துளிகள் செலவிட்டு)அந்த காணொளியை "ஒர்முறையேனும் கண்டிடிடுங்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக